×

ஆடை உற்பத்தி நிறுவனத்தில் கலெக்டர் ஆய்வு

கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி  மாவட்ட தொழில் மையம் சார்பில், டான்சி பகுதியில் அரசின் மானியத்தில் இயங்கும் அச்சக  குழுமம் மற்றும் ஆடை தயாரிப்பு நிறுவனத்தை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: மாவட்ட தொழில் மைய வளாகத்தில் மத்திய  அரசின் ரூ9 கோடியே 31 லட்சம், மாநில அரசின் ரூ90 லட்சம் மானியத்துடன்  கூடிய பங்களிப்பு, குழு பங்களிப்பு ரூ1 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ11 கோடியே 71 லட்சத்தில் அச்சக தொழில் குழுமம் இயங்கி வருகிறது. இதில் நவீன  அச்சு எந்திரங்கள், சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள், போர்டுகள்  அச்சிடப்படுகிறது. அனைத்து விதமான அச்சு பணிகளும் இங்கு நடைபெறுகிறது. இதன் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், வேலூர்  மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர். கிருஷ்ணகிரியில்  அச்சக தொழில் குழுமம் அமைக்கப்பட்டதின் மூலம் அச்சக உரிமையாளர்கள் பயன்  பெற்றுள்ளனர்.

மேலும், தமிழக முதல்வரின் நீட்ஸ் திட்டம் மூலம் 25 சதவீத  மானியத்தில் ரூ14 லட்சம் நிதி உதவி பெற்றுள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில்  15 பேர் நேரடி பணியாளர்களாகவும், 50 பேர் மறைமுக பணியாளர்களாகவும்  பணிபுரிந்து வருகிறார்கள். இவ்வாறு கலெக்டர் கூறினார். ஆய்வின் போது  மாவட்ட தொழில் மைய மேலாளர் தேவராஜ், உதவி மேலாளர் பிரசன்னா, சிறு, குறு  தொழில் நிறுவன தலைவர் ஏகம்பவாணன், அச்சக குழும மேலாண்மை இயக்குநர்  ராகவேந்திரன், இயக்குநர்கள் ஜெயந்தி ஸ்ரீதரன், ரமேஷ்குமார், கதிரவன்,  ராமச்சந்திரன், சீனிவாசன், தயாளன், பிரகாஷ், ஆடை தயாரிப்பு நிறுவன மேலாண்மை  இயக்குநர் கீர்த்தனா, பிஆர்ஓ சேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்