×

சூதாடிய 6 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஆக.14:  பாரூர் எஸ்ஐ சம்பூரணம் மற்றும் போலீசார், குடிமேனஅள்ளி மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அதில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி(38), மகேந்தி ரன்(40), ராஜா(55) ஆகியோரை கைது செய்தனர். சக்திவேல்(45), மாதன்(35), திருப்பதி(30) ஆகிய மூன்று பேர் தப்பியோடிவிட்டனர்.

இதே போல் கெலமங்கலம் போலீஸ் எஸ்ஐ செல்வராகவன் மற்றும் போலீசார் கெலமங்கலம்  பாரந்தூர் சாலையில் செட்டிப்பள்ளி அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் ரோந்து சென்றனர்.  அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கெலமங்கலத்தை சேர்ந்த முனியப்பன்(29), நாராயணசாமி(28), கோபி(23) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது