×

பைபாஸ் தடுப்பு கம்பியில் பைக் மோதி டிரைவர் பலி

கிருஷ்ணகிரி, ஆக.14: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கொல்லப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (35). வேன் டிரைவர். நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரிக்கு பைக்கில் சென்றார். மீண்டும் ஊருக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரப்பம் அருகே மருதேப்பள்ளி கூட்ரோட்டில் சாலையோரம் இருந்த தடுப்பு கம்பி மீது பைக் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் அவர் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது