×

டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

கிருஷ்ணகிரி, ஆக.14: சுதந்திர தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (15ம் தேதி) டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதியின்படி நாளை (15ம் தேதி) சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானம் விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்