தேன்கனிக்கோட்டை, ஆக. 14: மதகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரோட்டரி கிளப் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே மதகொண்டப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஓசூர் ரோட்டரி கிளப் சார்பில் ரோட்டோ ஸ்போர்ட்ஸ் என்ற தலைப்பில் ஓட்ட பந்தயம், சதுரங்கம், வாலிபால், கோகோ, கபாடி போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளை சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஓசூர் ரோட்டரி கிளப் சர்பாக பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் ரோட்டரி கிளப் தலைவர் ஆனந்தகுமார், உதவி கவர்னர் அரிகிருஷ்ணன், செயலாளர் வெங்கடேஷ், வாசுதேவன், ராஜ்குமார், அய்யுலுசாமி, தாக்ஷாயினி, விஜய், சிவகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் ஹேமாவதி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.