×

கருணாநிதி மறைவையொட்டி மலரஞ்சலி, இரங்கல் ஊர்வலம்

கிருஷ்ணகிரி, ஆக.14: திமுக  தலைவர் கருணாநிதி மறைவையொட்டி வேப்பனஹள்ளி, பெரியகோட்டப்பள்ளியில் இரங்கல் ஊர்வலம், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி,  கடந்த 7ம் தேதி காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர்  அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில்  ஏராளமானோர் தினமும் அஞ்சலி செலுத்தி  வருகின்றனர். மாவட்டங்களில் பல்வேறு அமைப்பினர், திமுகவினர் இரங்கல்  கூட்டம் நடத்தி, கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி  வருகின்றனர்.

அதன்படி, வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பெரியகோட்டப்பள்ளி ஊராட்சி திமுக சார்பில் கருணாநிதியின் படத்திற்கு மாலை  அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, இரங்கல் ஊர்வலம் நடந்தது. வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன் தலைமை வகித்தார். பின்னர்  நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் மகேந்திரன், ஜபார், மாதேஷ், உமாபதி,  வடிவேல், வெங்கடேசன், பரசுராமன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு  அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கருணாநிதி மறைவையொட்டி, வேப்பனஹள்ளியில் முன்னாள் திமுக கவுன்சிலர் கலீல் தலைமையில் அவரது படத்துடன் கட்சியினர் இரங்கல் ஊர்வலம் நடத்தினர்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது