×

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஆசிரியர் கூட்டணி மவுன ஊர்வலம்

நாமக்கல், ஆக. 14: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி நேற்று நாமக்கல்லில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். இதில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். மவன ஊர்வலம் மோகனூர் ரோட்டில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தில் இருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பூங்கா ரோட்டில் நிறைவடைந்தது.பின்னர் அங்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் வீரசிவாஜி, சபூர்அகமது, பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுபோல புதுச்சத்திரம் வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இதில் வட்டார தலைவர் சிவக்குமார், செயலாளர் ரமேஷ், பொருளாளர் தட்சிணாமூர்த்தி,  நிர்வாகிகள் கண்ணன், நடராஜன், சம்பத்,  ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.திருச்செஙகோடு : திருச்செங்கோடு  அடுத்த வெள்ளாளப்பட்டியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை நிறுவப்பட்டுள்ளது.திருச்செங்கோடு  நகராட்சி 11வது வார்டு வெள்ளாளப்பட்டி அருந்ததியர் தெருவில், மறைந்த திமுக  தலைவர் கருணாநிதியின் திருஉருவச்சிலை நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு  நகர பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். நகர செயலாளர்  கார்த்திகேயன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட  செயலாளரும், பரமத்திவேலூர் எம்எல்ஏவுமான கே.எஸ். மூர்த்தி கலந்துகொண்டு  சிலை நிறுவும் பணியை துவக்கி வைத்தார்.

முன்னதாக பிரதான சாலையில்  இருந்து பேண்டு வாத்தியங்கள் முழங்க, திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை  ஊர்வலமாக  எடுத்துச்செல்லப்பட்டு நிறுவப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  மாவட்ட  இளைஞர் அணி அமைபாளர் மதுராசெந்தில், வர்த்தகர் அணி அமைப்பாளர் கிரிசங்கர்,  நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், நகர  பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பெருமாள், ரமேஷ், தகவல் தொழில்நுட்ப அணி  மனோஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கோகுல்தாஸ், நகர இளைஞரணி துணை  அமைப்பாளர் கோபி, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மோகன் மற்றும்  கட்சி தொண்டர்கள்,  பொதுமக்கள்  கலந்துகொண்டனர்.திராவிடர் விடுதலை கழகத்தினர் இரங்கல் :திருச்செங்கோட்டில்  திராவிடர் விடுதலை கழகம் சார்பில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு  இரங்கல் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சோமசுந்தரம் தலைமை  தாங்கினார்.  மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட  அமைப்பாளர் வைரவேல் மற்றும் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர்  முன்னிலை வகித்து பேசினர்.இந்நிகழ்ச்சியில் ஆதித்தமிழர் பேரவையின்  மாநில துணை பொதுச்செயலாலர் செல்வவில்லாளன், துணை பொதுச்செயலாளர் தமிழரசு,  மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் திமுக முன்னாள் அவைத்தலைவர்  தாண்டவன் மற்றும் கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்