நாமக்கல், ஆக.14: நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களுக்கு தேவையான நபர்களை, இந்த முகாம் மூலம் தேர்வு செய்துகொள்ளலாம்.தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விருப்பம் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.