×

மாநில மகளிர் கைப்பந்து போட்டி சென்னை, ஓசூர் அணிகள் கோப்பையை வென்றது

திருச்செங்கோடு, ஆக. 14:   திருச்செங்கோட்டில் நடந்த மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில் சென்னை சிவந்தி அணி முதலிடமும், ஓசூர் அணி இரண்டாவது இடத்தை பிடித்து கோப்பையை தட்டிச்சென்றது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டெக்ஸ்கிளப் திடலில் அமரர் வேலாயுதம், திருவேங்கடம் நினைவு மாநில அளவிலான மகளிர் கைப்பந்து போட்டிகள் நடந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர். இரவில் மின்னொளியில்  மூன்று நாள் போட்டிகள் நடந்தன.மூன்றாவது நாள் முடிவில் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தொழிலதிபர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை வகித்தார். மாநில கைப்பந்து கழக பொதுச்செயலாளர் சித்திரபாண்டியன் முன்னிலை வகித்தார். நாமக்க்ல மாவட்ட எஸ்பி அருளரசு சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.இறுதிப்போட்டியில் சென்னை சிவந்தி அணியும், ஓசூர் டான் ேபாஸ்கோ அணியும் மோதின. இதில் 2க்கு 1 என்ற கணக்கில் சிவந்தி அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஓசூர் அணி இரண்டாமிடமும், மூன்று மற்றும் நான்காவது இடத்தை பொள்ளாச்சி என்ஜிஎம் அணி மற்றும் சேலம் பொறியியல் கல்லூரி  அணியும் பெற்றன. இவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. சிறந்த விளையாட்டு விராங்கனைகளாக அபர்ணா, பரிமளம், அனுராதா, பூரணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்செங்கோடு கைப்பந்து குழு நிர்வாகிகள் ஆசிரியர் அங்கப்பன், யோகானந்தம், சதாசிவம், பாலசுந்தரம், சண்முகசுந்தரம், முருகையன், குணசேகரன் ஆகியோர் கொண்ட குழு செய்திருந்தது.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்