×

திருச்செங்கோடு மலைக்கோயில் சேவையில் திரிசாரணர்கள்

திருச்செங்கோடு,  ஆக. 14:  ஆடி மாதத்தையொட்டி திருச்செங்கோடு வித்யா விகாஸ் பொறியியல்  மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த திரிசாரணர்கள் 30 பேர் கொண்ட  குழுவினர்,  அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் சேவை பணிகளை செய்தனர். அவர்கள்  தரிசனத்துக்கு வந்த பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், வாகனங்களை  சரியான இடங்களில் நிறுத்துவது, கோவிலை சுத்தம் செயவது போன்ற பணிகளில்  இவர்கள் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட சாரண இயக்க உதவிசெயலாளர் விஜய்  தலைமையில், அவர்கள் சேவை பணியில் ஈடுபட்டனர். மலைக்கோயிலுக்கு வந்திருந்த  மின்துறை அமைச்சர் தங்கமணி, அங்கு  மாணவர்களின் சேவையைப் பாராட்டி  வாழ்த்தினார்.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு