×

ஆடிப்பூர விழாவையொட்டி காமாட்சி அம்மனுக்கு வளைகாப்பு விழா

தர்மபுரி, ஆக.14: தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில், கல்யாண காமாட்சி அம்பிகை சன்னதியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில், கல்யாண காமாட்சி அம்பிகை ஆலய ஆடி மாத விழா, கடந்த 4 நாட்களுக்கு முன் தொடங்கியது. ஆடி அமாவாசையையொட்டி, கடந்த 11ம் தேதி சிறப்பு பூஜை நடந்தது. நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் பால திரிபுரசுந்தரி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கல்யாண காமாட்சி அம்பிகைக்கு வளைகாப்பு, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள் வளையல், மஞ்சள், குங்குமம், சந்தனம், பூ, ஜாக்கெட், தாலிக்கயிறு ஆகியவற்றை அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். அதை தொடர்ந்து அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. பெண்களே அம்மனுக்கு ஆரத்தி எடுத்தனர். இதையடுத்து கல்யாண காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா