×

பிடமனேரி பால் கூட்டுறவு சங்கத்தில் தலைவர் பதவிக்கு 3 முறை முடிவு அறிவிப்பு

தர்மபுரி, ஆக.14: தர்மபுரி பிடமனேரி பால் கூட்டுறவு சங்கத்தில், தலைவர் பதவிக்கு 3 முறை முடிவு வெளியானதால் சங்கத்தின் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தர்மபுரி அருகே பிடமனேரி பால் கூட்டுறவு சங்கத்திற்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு 11 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  கடநத் 11ம் தேதி, தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில், 8 இயக்குனர்கள் கலந்து கொண்டு தலைவராக சுந்தர்ராஜ், துணைத்தலைவராக சுப்பிரமணியை தேர்வு செய்தனர். இதையடுத்து தேர்தல் அலுவலரான சாந்தி, தலைவராக சுந்தர்ராஜையும், துணை தலைவராக சுப்பிரமணியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்து, முத்திரையுடன் கையெப்பமிட்டார். இது சங்க தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் பகல் 1 மணிக்கு மேல், இச்சங்கத்துக்கு தலைவராக மாதேஷ் மற்றும் துணைத்தலைவராக கணேசன் ஆகியோரை தேர்ந்தெடுத்ததாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மீண்டும் மாலை, 3 மணிக்கு மேல் தலைவராக மாதேசையும், துணைத்தலைவராக சுந்தர்ராஜையும் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இது குறித்து தகவல் அறிந்த இயக்குனர் மற்றும் முதலில் தலைவர், துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சங்க உறுப்பினரான பச்சியப்பன் கூறுகையில், சங்க இயக்குனர்கள் மூலம் தேர்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத்தலைவர்களை, ஆளும் கட்சியினர் தூண்டுதலின் பேரில், தேர்தல் அலுவலர் சாந்தி தன்னிச்சையாக மாற்றி, மாற்றி அறிவித்துள்ளார். தேர்தல் அலுவலர் சாந்தி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம் என்றார்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா