×

தி காவிரி பொறியியல் கல்லூரியில் மின்னியல், மின்னணுவியல் துறை சார்பில் கருத்தரங்கு

சேலம், ஆக.14: தி காவிரி பொறியியல் கல்லூரியில் மின்னியல், மின்னணுவியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது.
மேச்சேரி தி காவிரி பொறியியல் கல்லூரியில், மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை சங்க தொடக்க விழா, கருத்தரங்கம் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சிவராமனுக்கு, பொறியியல் கல்லூரிகளின் டீன் ஓபுளி, முதல்வர் துரைசாமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிவு வழங்கினர்.   தி காவிரி பொறியியல் கல்லூரி முதல்வர் துரைசாமி தலைமை தாங்கி பேசினார். அதில் அரசு மற்றும் தனியார்  துறைகளில் குவிந்து கிடக்கும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை பற்றி மாணவ, மாணவிகளிடம் பேசினார்.    சிறப்பு விருந்தினர், பன்னாட்டு வேலை வாய்ப்புகளை பற்றியும், அந்த வேலைகளில் சேர மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்வதற்கான வழிமுறைகளை பற்றியும் கூறினார். தொடர்ந்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர், துறை தலைவர் பரஞ்சோதி பரிசு வழங்கினர். கல்வி நிறுவனங்களின் கௌரவ தலைவர் நடேசன், துணை தலைவர் மதன்கார்த்திக், தலைவர் அன்பழகன், செயலாளர் இளங்கோவன், தாளாளர் ராமநாதன், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், செயல் இயக்குநர் கருப்பண்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.   மாணவர் நந்தகுமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை உதவி பேராசிரியர் சுரேஷ் செய்திருந்தார்.


Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது