×

பத்மவாணி மகளிர் கலை கல்லூரியில் வணிக கண்காட்சி

ஓமலூர், ஆக.14:  ஓமலூர் அருகே, பத்மவாணி மகளிர் கலை கல்லூரியில் வணிக கண்காட்சி நடைபெற்றது. சேலம் பெரியார் பலகலைக்கழகம் முன்புள்ள பத்மவாணி மகளிர் கல்லூரியில், பெண்கள் வணிகத்திறன் மேம்பட்டு வணிக கண்காட்சி நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு தாளாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இயக்குனர் நிவிதா முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் துரைசாமி வாழ்த்தி பேசினார். கல்லூரி முதல்வர் சுப்புராஜ், நிர்வாக அலுவலர் முத்துகுமார் ஆகியோர் கண்காட்சி விளக்கவுரையாற்றினர். இதில், மாணவிகள் தயாரித்த சத்தான உணவுகள், பழங்கள், காய்கறிகளை பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும், அழகுசாதன பொருட்கள், அலங்கார பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது. இதில், வணிகவியல் துறை மாணவிகள் தங்களது பொருட்களை அனைவரும் வாங்கும் வகையில் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து விற்பனை செய்தனர். இதனை தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றது.  இதையடுத்து, கண்காட்சியில் அதிகமாக பொருட்களை விற்பனை செய்த மாணவிகள் மற்றும் அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, கல்லூரி இயக்குனர்கள் பத்மாவதி, இசைவாணி, கல்வியியல் கல்லூரி முதல்வர் சோனா ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். இதில், வணிகவியல் துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை