×

ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர் பதவியேற்பு

பென்னாகரம், ஆக.14: பென்னாகரத்தில் ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர்கள் பதவி ஏற்று கொண்டனர். பென்னாகரத்தில் டிடி 188 அரசு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் உள்ளது. இதில் 251 ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். இந்த சங்கத்திற்கான தேர்தல் மே 8ம் தேதி நடைபெற்றது. பின்னர், நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. நீதிமன்றம் தடையை விலக்கியதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழாசிரியர் முனியப்பன் தலைமையிலான அணியினர் மொத்தம் உள்ள 11 இடங்களில் வெற்றி பெற்றனர். லட்சுமணன்,

ராஜேஸ்வரி, பிரியா, ரேவதி, லெனின், எல்லப்பன், ராமு, சிவக்குமார், தங்கவேல் மற்றும் பாலமுருகன் ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற சங்க தலைவருக்கான தேர்தலில், தலைவராக பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த தமிழாசிரியர் முனியப்பன், துணைத் தலைவராக லட்சுமணன் ஆகியோர் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்று கொண்டனர். இதற்கான சான்றிதழ்களை, தேர்தல் அலுவலர் கூட்டுறவு சார்பதிவாளர் விஜயகுமார், செயலாளர் மோகன்ராஜ் ஆகியோர் வழங்கினர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா