×

வாழப்பாடி அருகே சூறைக்காற்றுக்கு மரம் விழுந்து 4 வீடுகள் சேதம்

வாழப்பாடி, ஆக.14:  வாழப்பாடி அருகே, நேற்று முன்தினம் வீசிய பலத்த சூறைக்காற்றுக்கு மரம் முறிந்து விழுந்ததில், 4 வீடுகள் இடிந்து சேதமானது. வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது, முத்தம்பட்டி ஊராட்சியில், அருந்ததியர் தெருவில் உள்ள புளியமரம் சாய்ந்து விழுந்தது. இதில், அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், சுரேஷ், சங்கீதா, செல்வி ஆகியோரது வீடுகளின் மீது மரம் விழுந்ததில் இடிந்து சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். இதுகுறித்த தகவலின் பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

Tags :
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு