×

தர்மபுரியில் நாளை சுதந்திர தினவிழா

தர்மபுரி, ஆக.14: நாடு முழுவதும் நாளை (15ம் தேதி) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தின விழா நடக்கிறது. காலை 9.20 மணிக்கு கலெக்டர் மலர்விழி தேசிய கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து, அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதில் எஸ்பி பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் உள்பட அனைத்து அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா