×

காடையாம்பட்டி அருகே 8 பவுன் செயினை பறித்த 3 பேர் சிக்கினர்

காடையாம்பட்டி, ஆக.14: காடையாம்பட்டி அருகே, 8 பவுன் செயினை பறித்து சென்ற 3 பேரை பிடித்து  ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.காடையாம்பட்டி அருகே நாகியம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி அலமேலு (50). இவரது தங்கை கோதாவரி. இவரது கணவர் எல்லப்பன். அனைவரும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் கோதாவரி, அலமேலு ஆடித்திருவிழாவையொட்டி சேலத்திற்கு சென்றிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, சேலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பினர். வயல்வெளியியில் கோதாவரி, அலமேலு வந்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த வாலிபர் திடீரென கோதாவரி கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினார். அதில் தப்பியோடும் போது, ஒரு காலில் இருந்த செருப்பை தவற விட்டு ஓடினார்.

இது குறித்து கோதாவரி தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று செயினை பறித்து தப்பிச்சென்ற போது அதில் ஒரு செருப்பை விட்டு சென்றது அலமேலு மகன் சரவணன் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சரவணணை பிடித்து விசாரித்தனர். அதில், கோதாவரி மகன் அருள்மணி, மாணிக்கம் மகன் முருகன் ஆகியோர் இந்த திருட்டில் சம்மந்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை தொடர்ந்து 3 பேரை பிடித்து, அவர்களிடம் இருந்த 8 பவுன் செயினை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்