×

கல்வடங்கம், கோனேரிப்பட்டியில் படகு போக்குவரத்து 3வது நாளாக நிறுத்தம்

இடைப்பாடி, ஆக.14:   மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் செக்கானூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி ஆகிய நீர்மின்தேக்க நிலையம் வழியாக, கல்வடங்கம் காவிரியாற்றின் வழியாக காவேரிப்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, புளியம்பட்டி வழியாக பவானி, திருச்சி, தஞ்சாவூர் வரை டெல்டா பாசனத்திற்கு செல்கிறது. காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், நேற்று 3வது நாளாக பரிசல் மற்றும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. சங்ககிரி டிஎஸ்பி அசோக்குமார், ஆர்டிஓ ராமதுரைமுருகன், தாசில்தார் கேசவன், அருள் குமரன் மற்றும் தேவூர், பூலாம்பட்டி, இடைப்பாடி, கொங்கணாபுரம் போலீசார், வருவாய் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை