×

சுதந்திர தினவிழா நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு

சேலம், ஆக.14: நாடு முழுவதும் நாளை 72வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் ஆணையின்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஹோட்டல் பார்கள் நாளை (15ம் தேதி) மூடப்பட வேண்டும். மேலும், எந்த வகையிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இதனைமீறி மது விற்பனை செய்பவர்கள் மீது, அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று  சேலம் கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்