×

ஆக.24ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாகர்கோவில், ஆக.14:  குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:குமரி மாவட்டத்தில் மானிய விலையில் வழங்கும் சமையல் எரிவாயு விநியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நுகர்வோர் நலன்கருதி சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொள்ளும் மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஆகஸ்ட் 24ம் தேதி அன்று பிற்பகல் 3 மணியளவில் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு எரிவாயு விநியோகம் செய்வதில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம்.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி