×

சங்கராபுரம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை

திருக்கோவிலூர், ஆக. 14:  சங்கராபுரம் அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்கு அதே பகுதியை சேர்ந்த அஜித் (எ) கோவிந்தராஜ் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கும், அஜித்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அஜித் சிறுமியை காதலிப்பதாக கூறி அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையறிந்த சிறுமியின் தாயார் அஜித்திடம் சென்று கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.இதுகுறித்து சிறுமியின் தாயார் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள அஜித்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை