×

ஓட்டல்களில் போலீசார் திடீர் சோதனை

புதுச்சேரி, ஆக. 14: இந்திய சுதந்திர தினம் நாளை நாடு முழுக்க கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதல்கட்டமாக கடந்த 9ம் தேதி புதுவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டும், மோப்ப நாய் உதவியுடனும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து கிழக்கு பகுதி எஸ்பி (பொறுப்பு) மாறன் தலைமையில், ஓட்டல் உரிமையாளர்கள், மேலாளர்களுடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் 10ம் தேதி நடந்தது.

இதில் கலந்துகொண்ட ஓட்டல்களின் உரிமையாளர்கள், மேலாளர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பெரிய கடை மற்றும் முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் எஸ்பி மாறன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்துக்கு இடமான ஆட்கள் தங்கியுள்ளார்களா? என போலீசார் தீவிர சோதனை நடத்தினர். ஆய்வின்போது பெரியகடை இன்ஸ்பெக்டர் மோகன்குமார், முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...