×

சிதம்பரம் அருகே ரயில் மோதி கொத்தனார் பலி

சிதம்பரம், ஆக. 14: சிதம்
பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் கட்டுகரை தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (62). கொத்தனாரான இவர் நேற்று மதியம் சிதம்பரம் ரயில் நிலையம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ரயில்வே தண்டவாளத்தை அவர் கடந்த போது, அவ்வழியாக வந்த கூட்ஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில் மகாலிங்கம் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ரீஜா, சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து போன மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி