×

பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

கடலூர், ஆக. 14: கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர்  தண்டபாணி தலைமை தாங்கினார். இதில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மொத்தம் 329 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தண்டபாணி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜயா, தனித்துணை ஆட்சியர் பரிமளம், தனித்துணை ஆட்சியர் ஜெயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர்  வெற்றிவேல் உள்ளிட்ட  அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.     


Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு