×

மதுபாட்டில், புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் அதிரடி கைது

திட்டக்குடி, ஆக. 14: திட்டக்குடி சப்-இன்ஸ்
பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு டாஸ்மாக் கடை அருகே பதுங்கி நின்ற மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அதே ஊரை சேர்ந்த சண்முகம் மகன் கார்த்திக் (34) என்பதும், அரசு அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோன்று நேற்று முன்தினம் மாலையில் சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் மற்றும் போலீசார் கடைவீதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட பான்பராக், பான் மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தகவல் கிடைத்தது. இதையடுத்து பெட்டிக்கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, திட்டக்குடியை சேர்ந்த கிருஷ்ணன் (70), பெரியசாமி (48), முருகானந்தம் (60) ஆகியோர் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.6 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...