×

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

காட்டுமன்னார்கோவில், ஆக. 14: காட்டுமன்னார்கோவிலில் உடையார்குடி மாரியம்மன் கோயில் ஆடிமாத திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று காலை அம்மன் தேர் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.உடையார்குடி மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் காட்டுமன்னார்கோவில் முக்கிய கடைவீதிகள் வழியாக பவனி வந்தது. சுமார் 300க்கும் மேற்பட்ட
பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை செடல் திருவிழா, மாலை தீமிதி திருவிழா நடக்கிறது.

Tags :
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்