×

மணல் கடத்திய 2 மாட்டுவண்டிகள் பறிமுதல்

விருத்தாசலம், ஆக. 14: விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூதாமூர் மணிமுக்தாற்றில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு சென்ற 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் அரசு அனுமதியின்றி மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 மாட்டுவண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களான பூந்தோட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (56), மணிக்கண்ணு மகன் ஏழுமலை (42) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு