×

வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா பாதுகாப்பில் 1,700 போலீசார் இன்று முதல் நாளை மறுதினம் வரை

வேலூர், ஆக.14:வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி முக்கிய இடங்களில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று மாலை தொடங்கி நாளை மறுதினம் வரை ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் 72வது சுதந்திர தினவிழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோயில்கள் உட்பட பல்வேறு முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் எஸ்பி பிரவேஷ்குமார் தலைமையில் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் உட்பட மாவட்டம் முழுவதும் 2 ஏடிஎஸ்பிக்கள், 10 டிஎஸ்பிக்கள் என்று 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் காலை 6 மணி வரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மாவட்ட எல்லைப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் நேற்று முதலே போலீசார் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...