×

டாஸ்மாக் கடைகளுக்கு 15ம் தேதி விடுமுறை

திருவள்ளூர், ஆக. 13: சுதந்திரதினத்தையொட்டி வரும் 15ம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விதிகள் 2003ன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள், அதை சார்ந்த ‘’பார்’’கள் அனைத்தும் வரும் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கண்டிப்பாக மூடப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்

Tags :
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தல்...