×

மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே பாடி, டிஎம்பி நகர் சர்ச் தெருவில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, 50க்கும் மேற்பட்டோர்  உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்துகள் ஒரு குளிர்சாதன இயந்திரத்தில் வைத்து  பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 11.45 மணியளவில், இந்த குளிர்சாதன இயந்திரத்தில் திடீரென காஸ் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதனால்  அதிர்ச்சி அடைந்த உள்நோயாளிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி வந்தனர். தகவலறிந்து வில்லிவாக்கம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து அரைமணி நேரத்துக்கு போராடி குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள்  கொண்டு வந்தனர். அதற்குள் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்து, மாத்திரைகள் எரிந்து சாம்பலாகின.

Tags :
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...