×

திமுக தலைவர் மறைவால் அதிர்ச்சியில் இறந்த 6 பேர் குடும்பத்தினருக்கு ஆறுதல்

இடைப்பாடி, ஆக.13:திமுக தலைவர் கருணாநிதி மறைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்த 6 தொண்டர்களின் குடும்பதினருக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆறுதல் கூறினார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால், கடந்த 7ம் தேதி காலமானார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில், இடைப்பாடி தாவாந்தெரு வீரப்பன், இடைப்பாடி ஒன்றியம் மசையன் தெரு மணி, சித்தூர் துரைசாமி, பூலாம்பட்டி வெங்கடாஜலபதி, கொங்கணாபுரம் ஒன்றியம் கட்சிப்பள்ளி லட்சுமணன், ராஜா (எ) வெள்ளக்குட்டி ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தாருக்கு, சேலம் மேற்கு தொகுதி திமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் நேரில் சென்று ஆறுதல் கூறி, படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரம், சம்பத்குமார், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், இடைப்பாடி நகர செயலாளர் பாஷா, ஒன்றிய செயலாளர்கள் இடைப்பாடி எஸ்.பூவாக்கவுண்டர், கொங்கணாபுரம் பரமசிவம், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தியாகராஜன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கருப்பண்ணன், நகர அவை தலைவர் மாதையன், நகர துணை செயலாளர் வடிவேலு, மாவட்ட பிரதிநிதிகள் சிங்காரவேலு, ராமலிங்கம், தங்கவேலு, பேரூர் செயலாளர்கள் பூலாம்பட்டி பழனிசாமி, கொங்கணாபுரம் அர்த்தநாரீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED டூவீலர் திருடியவர் கைது