×

தாரமங்கலம் அருகேசர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

தாரமங்கலம், ஆக.13: தாரமங்கலம் அருகே சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. தாரமங்கலம் அருகே ஆரூர்பட்டி கிராமம் சேடப்பட்டி வானாங்கரடு பகுதியில், அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில், சர்க்கரை நோய் விழிப்புணர்வு மினிமாரத்தான் போட்டி நடந்தது. 2ம் ஆண்டு நடைபெறும் இப்போட்டியில் பள்ளி மாணவ, மானவிகள்  இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட ஊர்க்காவல் படை பெரியசாமி, தாரமங்கலம் இன்ஸ்ெபக்டர்  தட்சிணாமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்துல் கலாம் அறக்கட்டளை செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு  பரிசளிப்பு விழா நடந்தது. அருள்குமார் தலைமை தாங்கினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெல்டிங் கண்ணன், தனியார் கல்லூரி முதல்வர் கண்ணன், எஸ்ஐ  ராஜூ ஆகியோர் பரிசு வழங்கினர். விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாகிருஷ்ணன், தனராஜன், தனபால் மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர். வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை