×

அரசுக்கு சொந்தமான சுவர்களில் விளம்பரங்கள் எழுதுபவர்கள் மீது நடவடிக்கை

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 13: திருவெண்ணெய்நல்லூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கடலூர்-சித்தூர் உள்ளிட்ட இரண்டு முக்கிய சாலை செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலங்கள், நிழற்குடைகள், குடிநீர் பைப் உள்ளிட்டவைகள் உள்ளது. இவைகள் அனைத்திலும் அரசியல் பிரமுகர்கள் தங்களின் கட்சி தலைவர்களின் பிறந்தநாள், மாநாடு, கட்சி கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பிரமாண்டமான அளவில் சுவரில் விளம்பரங்களை எழுதி வைக்கின்றனர். சில நேரங்களில், ஒரே தேதியில் இருவருக்கு பிறந்தநாள் வந்தால் ஒரே சுவற்றில் ஒரு கட்சியினர் விளம்பரம் எழுதிவிட்டு சென்றால், மற்றொருவர் அதை அழித்துவிட்டு எழுதுவது போன்றவை நடந்து வருகிறது.

இதனால் தகராறு ஏற்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் நிலை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தேசிய நெடுஞ்சாலை சித்தானங்கூர் பகுதியில் உள்ள பாலம், நிழற்குடைகளில் இரு கட்சியினர் மாற்றி, மாற்றி சுவர் விளம்பரம் எழுதியதில்  தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப் பட்ட இடத்தில் யாரும் விளம்பரம் எழுதக்கூடாது என போலீசார் எச்சரித்து அனுப்பினர். இதுபோல் தொடர்ந்து நடைபெற்று வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே, அரசுக்கு சொந்தமான இடத்தில் சுவர் விளம்பரம் எழுதுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை