×

காசிக்கு சென்ற ஆஞ்சநேய பக்தர் மாயம்

கடலூர், ஆக. 13:  கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(74). காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தீவிர ஆஞ்சநேய பக்தர். இவர் தன் வீட்டின் பின்புறம் ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டியுள்ளார். பணி ஓய்வுக்கு பின்னர் இவர் ஆண்டிற்கு இரு முறை காசி, அயோத்தி உள்ளிட்ட புனித தலங்களுக்கு யாத்திரை சென்று வருவது வழக்கம். புனித யாத்திரைக்கு புறப்பட்டு சென்றால் திரும்பி வருவதற்கு இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். இவ்வாறு கடந்த 9-8-2017 அன்று காசிக்கு புறப்பட்டு சென்றார். ஆறு மாதங்களாகியும் இவர் வீடு திரும்பாததால் இவரின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள், காசி, அயோத்தி, கங்கை பகுதிகளுக்கு சென்று  தேடினர்.

எவ்வித தகவலும் கிடைக்காததால் அங்குள்ள காவல்நிலையங்களில்  புகைப்படத்தை தந்து கண்டு பிடித்து தருமாறு புகார் கொடுத்து திரும்பினர்.
இந்நிலையில் அவரின் மனைவி பவளாயி(70) காசிக்கு சென்ற தன் கணவரை காணவில்லை என கடலூர் தேவனாம்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED வில்லியனூரில் முதியவரை ஏமாற்றி தாமரை...