திருச்செங்கோடு, ஆக.13: திமுக தலைவர் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில், பரமத்தி வேலூரில் நேற்று நடந்த மௌன ஊர்வலத்தில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்றனர். வேலூர் 4 ரோடு தபால் நிலையம் முன்பிருந்து, ஊர்வலம் புறப்பட்டு திருவள்ளுவர் சாலை வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திமுக தலைவர் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார்.
மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி, மாவட்ட துணை செயலாளர்கள் சேகர், செல்வராஜ், தலைமை செயற்குழு யுவராஜ், செழியன், நகர செயலாளர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் தங்கவேல், தனராசு, பழனிவேலு, கே.கே.சண்முகம், ஆர்.சண்முகம், பேரூர் செயலாளர்கள் திருமலை, சூர்யா ராமலிங்கம், ரமேஷ்பாபு, மணி மாரப்பன், மகாமுனி, கருணாநிதி, சிவக்குமார், கதிர்வேல், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில், விவசாயி அணி ரங்கசாமி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில் மேற்கு மாவட்ட தலைவர் தனகோபால், மதிமுக சார்பில் கணேசன், கொமதேக மாவட்ட செயலாளர்கள் நதிராஜவேல், பூபதி, விடுதலை சிறுகதைகள் கட்சி காமராஜ், கம்யூனிஸ்ட் கட்சி கந்தசாமி, ஆதித்தமிழர் பேரவையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.