×

அரியலூரில் மனிதநேய விழிப்புணர்வு பேரணி

அரியலூர்,ஆக,13: அரியலூர் கல்வி மாவட்ட அளவிலான ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற  மூன்றுநாள் பயிற்சி முகாமில் 64 பள்ளிகளிலிருந்து  800 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதனையடுத்து நேற்று  மனித நேய விழிப்புணர்வு அமைதி பேரணி நடைபெற்றது. இப்பேரணியை போக்குவரத்து துணை ஆய்வாளர் அகமது உசேன்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரணி மான்போர்ட் பள்ளியிலிருந்து தொடங்கி ராஜாஜிநகர், இருசு குட்டை, பால்பண்ணை தெரு, பட்டுநூல்கார தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.மனிதநேயத்தை பற்றிய பதாதகைகள் ஏந்தியும், கோஷமிட்டவாறும் பேரணியாக சென்றனர். இதில் ஐஆர்சி  செயலாளர் கலையரசன்,ஜேஆர்சி கன்வீனர் சிவசங்கர், பொருளாளர் செந்தில்குமார. இணை கன்வீனர் சண்முகம் செல்வராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது