×

வாரணவாசி சமத்துவபுரத்தில் பாழடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய சமுதாய கூடம்

அரியலூர், ஆக. 13: அரியலூர் வாரணவாசியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் சமுதாயகூடம் பாழடைந்து சமூக விரோத செயல் இடமாக மாறியுள்ளது. அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் அமைந்துள்ளது சமத்துவபுரம். இது 1999ல் கட்டப்பட்டது. சமத்துவபுர மக்கள் பயன்பாட்டிற்காக சமுதாயகூடம் ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்டது. இச்சமுதாய கூடத்தில்  மேற்கூரை இடிந்து, மாடிப்படிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. மேலும் உட்புறம் எப்போது விழும் என்று தெரியாமால் தொங்கி கொண்டிருக்கிறது. சமுதாயகூடம் கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது.

இதனால் சமுதாய கூடத்தை சமூக விரோதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர,  மது அருந்துவது, சீட்டு விளையாடுவது, மேலும் பல தீய வேலைகள் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்வதற்கே பயப்படுகின்றனர. எனவே மாவட்ட நிர்வாகம் சமுதாய கூடத்தை சீரமைப்பு செய்து ஏழை எளிய மக்கள் குறைந்த வாடகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவபுர மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...