×

உலக தாய்ப்பால் வாரவிழா

ராசிபுரம், ஆக.13: நாமகிரிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ராசிபுரம் ராயல் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.  விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். திட்ட சேர்மேன் ராஜூ வரவேற்றார். கிளப் நிர்வாகிகள் இளஞ்செழியன், கார்த்திகேயன்,  ரமேஷ், ரவிக்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நாமகிரிப்பேட்டை வட்டார தலைமை மருத்துவர் தயாசங்கர் கலந்து கொண்டு தாய்பால் கொடுப்பதன்  அவசியம் குறித்து பேசினார்.

மருத்துவர்கள் செல்வாம்பிகை, வெண்ணிலா, விஜயகுமார், தீபா ஆகியோர் தாய்பால் முக்கியத்தும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி  பேசினர். இதில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி, பால், பழங்கள் என ஊட்டத்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் கிளப் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்