×

கூட்டுறவு வங்கி தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

சேந்தமங்கலம், ஆக.13: சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர், துணைத்தலைவர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர். சேந்தமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின்(பிஏசிபி) 11பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் சந்திரசேகரன்  தலைவராக, ஜெஸி துணைத்தலைவராக, சந்திரன், பெருமாள், துரைசாமி, கிருஷ்ணன், முருகேசன், மாதேஸ்வர், தங்கம்மாள், ராமசாமி, கென்னடி ஆகியோர்  நிர்வாகக்குழு உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கு பேரூர் அலுவலர் நடராஜன் பதவி பிரமான செய்து வைத்தார். பதவி ஏற்றுக்  கொண்டவர்களுக்கு நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் வரதராஜ் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் செயலாளர் பரமசிவம்,  நிர்வாகிகள் வெண்ணிலாசெந்தில், பூபதி, ரவிச்சந்திரன், ஸ்டாராசெந்தில், ஆறுமுகம், ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED சீர்வரிசை தட்டுகளுடன் வாக்களிக்க அழைப்பு