×

தர்மபுரி சந்தையில் தக்காளி கிலோ ரூ. 10க்கு விற்பனை

தர்மபுரி, ஆக.13:  பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.  இங்கிருந்து தர்மபுரி, பாலக்கோடு, ராயக்கோட்டை தக்காளி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 50டன் அளவிற்கு தக்காளி அறுவடை  நடக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதால், தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில வாரத்திற்கு முன்பு வரை  தக்காளி கிலோ ₹20க்கு விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் படிப்படியாக குறைந்து நேற்று தர்மபுரி மார்க்கெட்டுகளில், ஒரு கிலோ தக்காளி கிலோ ₹10க்கு  விற்பனை செய்யப்பட்டது.

Tags :
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு