×

மக்கள் எதிர்பார்ப்பு பார்வையற்றோர் பள்ளியில் கண் மருத்துவ முகாம்

தஞ்சை, ஆக. 13:  தஞ்சை மேம்பாலம் அருகில் உள்ள அரசு பார்வையற்றோர்  உயர்நிலைப்பள்ளியில் இலவச  மருத்துவ முகாம் நடந்தது. பாஜ மாநில இளைஞரணி துணை தலைவர் சதீஷ்குமார் போன்ஸ்லே தலைமை வகித்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற கண் மருத்துவர் நடராஜன், மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் 150  பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றனர். இதைதொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற கண் மருத்துவர் நடராஜன் கூறுகையில், கண் பாதிப்பு பிறவி கோளாறினாலும், மாலை கண் நோயினால் தான் வருகிறது. உலகளவில் 35 மில்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது.

அவர்கள் எல்லாம் கட்டாயம் கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் பார்வையற்ற மாணவர்களுக்கு டெலிமீடியோ மூலம் மருத்துவ சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்வையற்றவர்களுக்கு நவீன சிகிச்சை மூலம் பார்வை தெரியும் வகையில் அமெரிக்காவில் கண்டுபிடித்துள்ளனர். அதற்கான விலை ரூ.2 கோடியாகும். விலை அதிகமாக இருப்பதால் மத்திய அரசு தலையிட்டு அந்த மருந்தை குறைந்த விலைக்கு  வாங்கி கொடுத்தால்  பெரும்பாலோருக்கு பார்வை கிடைத்துவிடும் என்றார்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...