×

பொது பணியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்வு

நாமக்கல், ஆக.13: நாமக்கல் பொது பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக நாமக்கல் வடக்கு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி  ஆசிரியர் மலர்கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

துணைத்தலைவராக லோகநாதன், இயக்குனர்களாக  காளப்பநாய்க்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் புஷ்பராஜ், என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை வேதியியல் ஆசிரியர்  காளிதாஸ், சங்கர், பாலசுப்ரமணியம், கோபிகண்ணன், செல்வி, கவிதா, அருணா, அமுதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி