×

15ம் தேதி நடக்கிறது வேளாண் கண்காட்சி

கொள்ளிடம், ஆக.13:  கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு படிக்கும் ஜி-1 குழுவை சேர்ந்த மாணவிகள் சார்பில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. பேராசிரியர் சாந்தாகோவிந்த் தலைமை வசித்தார். வட்டார விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். மண்ணறிவியல் துறை பேராசிரியர் ராமசந்திரசேகரன் கலந்துகொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தார்.  பண்ணை மேலாண்மை, மாடித்தோட்டம், சொட்டுநீர் பாசனம், மண் புழு உரம் தயாரித்தல், விதைப் பந்து தயாரித்தல் உள்ளிட்ட பல மாதிரி திட்டங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது