×

திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் பனை மரக்கன்று நட்டு பராமரிப்பு

கிருஷ்ணகிரி, ஆக.13: ஆகஸ்ட் 17ம் தேதி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது என வி.சி. மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரியில், ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார். பொருளாளர்  ஓசூர் மாயவன், மாவட்ட துணை செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தி தொடர்பாளர்கள் மோகன், ஓசூர் வெங்கடேஷ், கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் தியாகு  உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆகஸ்ட் 17ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளையொட்டி கிருஷ்ணகிரி  மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் ஆயிரம் பனை மரக்கன்றுகள் வீதம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், பிறந்தநாள் விழா அன்று முகாம்கள் தோறும் கட்சி கொடியேற்றி, பெயர் பலகை வைத்து ஏழைகளுக்கு நலஉதவிகள் வழங்குவது என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில், மாநில நிர்வாகிகள் சரவணன், முனிசாமி, ஜெகநாதன், ஜீவானந்தம், தேக்கூர் நகராஜ், மகளிரணி  ஜெயலட்சுமி, இஸ்லாமிய பேரவை பர்கத், சாகுல், ஒன்றிய செயலாளர்கள் அருண், சசிக்குமார், திருமுருகன், பவுன்ராஜ், ரவி, மாதையன், மகேந்திரன், தியாகு,  பாக்கியராஜ், சிறுத்தை ராஜா, நகர செயலாளர்கள் சரவணன், கணபதி(எ) ஹரி, ஓசூர் கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக கட்சி பணியாற்றிட ஊத்தங்கரை தொகுதி துணை செயலாளராக நியமித்தமைக்கு பிரேம்குமார் மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு சால்வை  அணிவித்து வாழ்த்து பெற்றார்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்