×

தர்மபுரி பஸ் ஸ்டாண்டில்போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

தர்மபுரி, ஆக.13: தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால், பஸ்கள் சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தர்மபுரியில் நகர் மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அருகருகே உள்ளன. இந்த பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் சுமார் 500 புறநகர் பஸ்களும், 100 முறை நகர பஸ்களும் இயக்கப்படுகின்றன. தர்மபுரிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து, தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் தவிர, டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் உள்ளே வரக்கூடாது என விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் பயணிகளை ஏற்றி விட வருபவர்கள், டீ குடிக்க வருபவர்கள், கடைகளுக்கு வருபவர்கள் என பலரும் பஸ் ஸ்டாண்டிற்குள் இருசக்கர வாகனம், கார்களை கொண்டு வந்து நிறுத்துகின்றனர். இதனால் பஸ்கள் அதற்குரிய இடத்தில் நிறுத்த முடியாமல், பஸ்கள் செல்லும் பாதையில் நிற்கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பஸ்கள் செல்ல தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் பயணிகள பஸ்சில் ஏறுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, தர்மபுரி பஸ் ஸ்டிற்குள் டூவீலர் உள்ளிட்ட தனியார் வாகனங்களை அனுமதிக்க கூடாது. பஸ் ஸ்டாண்டின் இரு வாசல்களிலும், போலீசார் நின்று விதிகளை பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் வாகனங்களை தடுக்க ேவண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா