×

திண்டுக்கல் அருகே கண்டெய்னர் லாரி மோதி பள்ளி மாணவி பரிதாப பலி

திண்டுக்கல், ஆக. 13: திண்டுக்கல் அடுத்துள்ள பித்தலைப்பட்டியை சேர்ந்தவர் அருள் ஞானபிரகாசம். இவரது மகள் கேசியாராணி(17). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள அ.வெள்ளோட்டில் திருவிழாவிற்கு செல்ல தனது சித்தி அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த அருள்ஞான பாத்திமா(37)வுடன் டூவீலரில் சென்றார். டூவிலரை கேசியாராணி ஓட்டிச் சென்றார். திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை காப்பிக்கடை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் டூவீலரில் மோதியது.

இதில் நிலைதடுமாறி இருவரும் சாலையின் நடுவே விழுந்தனர். அப்போது அந்த வழியாக சிவகாசிக்கு கார் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி இவர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கேசியாராணி துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை போலீசார் விரைந்து வந்து கேசியாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும், பலத்த காயமடைந்த அருள்ஞான பாத்திமாவை சிகிச்சைக்காகவும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED நத்தம் அருகே பாலத்திலிருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு