×

விதிகளை மீறி... ஏடிஎம்கள் தீயில் எரிந்து நாசம்

திண்டுக்கல், ஆக. 13: திண்டுக்கல்லில் நடந்த தீ விபத்தில் அரசு வங்கிக்கு சொந்தமான 2 ஏடிஎம்கள் எரிந்து நாசமடைந்தன.திண்டுக்கல் ரவுன்ட் ரோடு பகுதியில் அரசு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் 2 ஏடிஎம் மெஷின்கள் உள்ளன. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இந்த ைமயத்திலிருந்து திடீரென கரும்புகை வர துவங்கியது.சிறிது நேரத்தில் 2 ஏடிஎம் மெஷின்களிலும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இருப்பினும் 2 மெஷின்களும் தீயில் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் ஏடிஎம் மெஷின்களில் இருந்த பணம் பாதுகாப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...