×

மாவட்டம் சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை இந்து மக்கள் கட்சி கோரிக்கை

பழநி, ஆக. 13:  சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் மனோஜ்குமார், செயலாளர் மருது முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஹரிஹரன் வரவேற்றார்.கூட்டத்தில், பழநி கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தி 12 வருடங்களுக்கு மேலாகிறது. எனவே கும்பாபிஷேகம் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோயில் இணையதளம் மூலம் ஆன்லைன் பணம் வசூலிப்பில் ஈடுபட்டு முறைகேடு புகாரில் சிக்கியுள்ள தனியார் நிறுவனம் மீது சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும். சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக நியமிக்க வேண்டும். சிலை செய்ததில் முறைகேடு நடந்திருந்தால் உள்ளூர் போலீசார் மூலம் வழக்குப்பதிய வேண்டும்.உபயதாரர்கள் மீதான விசாரணையால் திருப்பணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் சொத்து விபரங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்