×

கள்ளிகுளம் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வள்ளியூர், ஆக. 13: தெற்கு கள்ளிகுளம் தெட்சண மாற நாடார் சங்க கலைகல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. தெற்கு கள்ளிகுளம் தெட்சண மாற நாடார் சங்க கலைக் கல்லூரியில் 1988- 91ம் கல்வியாண்டுகளில் பயின்ற இயற்பியல் மாணவ, மாணவிகள் 27 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. தெட்சண மாற நாடார் சங்கத் தலைவர் சபாபதி நாடார் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், அங்குள்ள முன்னாள் முதல்வர்  காமராஜர் சிலைக்கு கல்லூரி முதல்வரும் முன்னாள் மாணவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளின் கலந்துரையாடல் நடந்தது. இதையொட்டி முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து நினைவுப்பரிசுகள் வழங்கியதோடு மலரும் நினைவுகளை பகிர்ந்து குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கல்லூரி முதல்வர் ஜான்  மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்திப் பேசினர். ஏற்பாடுகளை பழைய மாணவ, மாணவிகள் ஆசீர் அன்பழகன், ராஜ்குமார், ரமேஷ், சிந்தா, பிரபா செய்திருந்தனர்.



Tags :
× RELATED பனையில் இருந்து விழுந்து தொழிலாளி பலி